02/02/2022

கதிரவன் எழும்முன்

கதிரவன் எழும்முன்
காணொளியில் ஓர் கானம்...
மெல்லிசைப் பின்புலத்தில்..
துள்ளியதோர் ஓர் குரல்...
வருடும் நாதத்தில்
மறந்தது காலம்...
உருகிய தருணத்தில்
ஊற்றியது கண்ணீர்...
....
நகைத்தாள் இல்லாள்
உதைத்தாள் சொல்லால்
விளக்கேற்றா கண்களில்; நீர்
வடிப்பது பொய்யென்றாள்...

விளக்குவதைக் கேளென்றேன்
விளங்காவிடில் விலக்கென்றென்..

இசையே ஈசனென்றேன்...
ஈசனே இசையென்றேன்..
அவ்விரண்டும் ஒன்றென்றேன்..
அத்வைதம் அதுவென்றேன்..

என்னமோ? என்றுரைத்தாள்
எண்ணமே.....எல்லாமென்றேன்

No comments: