08/02/2022

நிறம்காணா நட்பு --- குட்டிக்கதை

 


யானையுடன் நட்புகொண்ட
.........வண்ணத்துப் பூச்சியொன்று
யானைநிறம் சாம்பலென்றே
‌.........ஏளனமாய்ப் பேசியதாம்!
யானையிதைத் தன்தலையில்*
..........ஏற்றாமல் விட்டதினால்
யானையதைத்** தன்தலையில்
..........ஏற்றிவைத்துப் பேசியதாம்!

*தலைக்கனம்
*வண்ணத்துப்பூச்சியை

அன்றைக்கும் அப்படித்தான்
........அன்போடு பேசுகையில்
வன்மையான வேகத்தில்
........வந்தபுயல் காற்றாலே
வண்ணத்துப் பூச்சியோட
........வாழ்க்கையே ஊசலாட
நண்பனின் நீண்டகையே*
....... நம்பிக்-கை தந்ததுவாம்!

*தும்பிக்கைக்குள் வைத்து காத்ததாம்

✍️செ. இராசா

#நிறம்காணா_நட்பு

#குட்டிக்கதை

No comments: