05/02/2022

புளியம்பழம்

 


உனை நினைத்தாலே போதும்..
நாக்கடியில் நதி சுரக்கும்
நீர்க்கடியில் இதழ் குளிக்கும்
பற்றிடக் கரம் ஏங்கும்...
பற்றினால் உடை விலகும்..
விரல்சேர்ந்து கொடை பிடிக்கும்
சிரம்புகுந்து தனை நனைக்கும்
பற்களிடைத் துண்டாக்கும்
பையப் பைய நீர் கலக்கும்..
கண்ணிமைகள் கதவடைக்கும்...
இன்பத்திலே பழம் இனிக்கும்
இறுதியிலே அது புளிக்கும்...

#புளியம்பழம்

No comments: