06/02/2022

சீச்சீ ....ஓடிப்போ

நிகழ்காலத்தை நிறுத்தி விடுகுகிறாய்
எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகிறாய்

நீ கலக்கும் ஒவ்வொரு தருணமும்
உன்னிடமே உலவ வைக்கிறாய்
அனைத்தையுமே கசப்பாக்குகிறாய்.
நீ என்ன அழையா விருந்தாளியா?
இல்லை அலையும் உறவாளியா?

நீ யாராய் இருந்தால் என்ன?
நான் ஏற்றால் தானே....
சீச்சீ ....ஓடிப்போ.......#கவலையே...

No comments: