07/02/2022

உடைந்த தக்காளி

 


உடைந்த தக்காளியென்று
உதாசீனப்படுத்தாதீர்..
எத்தனையோ பேர் வாழ்வை
இன்னும் உடையாமல் காப்பது அதுதான்..

அழுகிய தக்காளியென்று
அலட்சியப்படுத்தாதீர்...
எத்தனையோ பேர் அழுகையை
இன்னும் அழுகாமல் காப்பது அதுதான்...

இங்கே...தேவையென்பது...
விரும்புவதால் அல்ல..
வேறு வழியே இல்லாததால்...

No comments: