15/02/2022

எங்கே எனது ரசிகர்?

 #எங்கே_எனது_ரசிகர்?

ஒன்றுமே இல்லாமல்
ஓதிய காலத்தில்
ஓடோடி வந்தவரே- எம்மை
உச்சத்தில் வைத்தவரே..
அன்றிலும் இன்றைக்கே
ஆயிரம் செய்கின்றேன்
கண்டிட மாட்டீரோ- இல்லைக்
கண்டதால் விட்டீரோ?

கற்றிடா காலத்தில்
காட்டாற்று வேகத்தில்
கொட்டினேன் நூறுகவி- அன்று
செப்பினீர் ஆசுகவி!
கற்றவர் பாதையில்
முற்றிலும் மாற்றியே
காட்டினேன் வேறுகவி- இன்று
கானல்நீர் ஆச்சுகவி...!!

✍️செ. இராசா

No comments: