13/02/2022

உயிரோவியம் இவளாவென

 


உயிரோவியம் இவளாவென
உரையாடிட நடந்தாயடி..
உமையாளவள் இவள்தானென
உனையாவரும் புகழ்ந்தாரடி..

இயல்பாகவே இருந்தாலுமே
எழிலேயெனத் திகழ்ந்தாயடி..
இடைகாட்டியே உடுத்தாலுமே
இறைபோலவேத் தெரிந்தாயடி..

நயமாகவே கவியாகவே
நதிபோலவே நனைத்தாயடி‌.
நலமாகவே பலமாகவே
தமிழாகவே அணைத்தாயடி...

புயலாகவே புரியாமலே
புதிராகவும் இருக்காயடி..
புதிதாகவே இனிதாகவே
உனதாகவே இருப்பேனடி..

No comments: