21/02/2022

திருக்குறள் ---- வள்ளுவர் திங்கள் - 199



🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#அறத்துப்பால்
முப்பாலில் வைத்த முதல்பாலைக் கற்போர்கள்
தப்பாமல் நிற்பார் தனித்து
(1)

#பாயிரம்
முன்னுரைபோல் வைத்த முதல்-இயல் பாயிரமே
தன்னுரைபோல் நிற்கின்ற சான்று
(2)

#இல்லறவியல்_துறவறவியல்
இல்லத்தில் வாழ்வோர்க்கும் இல்லம் துறந்தோர்க்கும்
நல்லறம் காட்டுகின்ற நூல்
(3)

#ஊழியல்
என்ன முயன்றாலும் என்னயி(து) என்போர்க்காய்
முன்வினை ஊழ்சொன்ன நூல்
(4)
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#பொருட்பால்

#சமூகவியல்_அரசியல்
தனிமனிதன் தாண்டி சமூகஅறம் காக்க
புனைந்ததோர் பாலே பொருள்
(5)

மன்னரின் ஆட்சியோ மக்களின் ஆட்சியோ
சொன்னபொருள் மாறாத சொல்
(6)

#நட்பியல்
நன்-நட்பா தீ-நட்பா -நம்-நட்பு யாதென்று
நன்வழியைக் காட்டுமிந்த நூல்
(7)

#குடியியல்
உழவுத் தொழில்சொல்லி ஊணளவைச் சொல்லி
ஒழுக்கமுறை சொல்லுமிந்த நூல்
(8.)
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#காமத்துப்பால்
அறத்தால் பொருளீட்டி ஆவதுதான் என்ன?
உறவாட வைத்ததோர் பால்
(9)

#களவியல்_கற்பியல்
மணமாகும் முன்;பின் வரும்காதல் நெஞ்சம்
இணங்குவதைச் சொல்லும் இனிது
(10)


No comments: