16/02/2022

சேரன்நீ அல்லவா சோழன்நான் அல்லவா

 


#மெட்டு_என்னப்பன்_அல்லவா

சேரன்நீ அல்லவா
..............சோழன்நான் அல்லவா
தென்பாண்டி மன்னவா
..............வம்சம்நாம் அல்லவா
தென்பாண்டி மன்னவா
..............வம்சம்நாம் அல்லவா

வள்ளுவனார் எங்கள் தெய்வத் திருப்பரன்
வள்ளுவன்-யார்? எங்கள் தெய்வத் திருப்பரன்
நல்லருளால் வந்த நன்மறை வழியே...
நல்லருளால் வந்த நன்மறை வழியே..

ஆண்டவர் நாங்களே அன்றைய நாளிலே
ஆண்டவர் நாங்களே அன்றைய நாளிலே
இன்றந்த பெருமையை ஏனோ இழந்தமே

மீண்டெழுவோமே...மீண்டெழுவோமே...

✍️செ. இராசா

No comments: