26/02/2022

ஊடலை நீக்க உதவுகின்ற -------------- வெண்பாக்கள் நிகழ்விற்காக




போதை தலைக்கேறி
........போகின்ற காளையா?
பாதை தடுமாறிப்
.........பாய்ந்துவிழும்- பேதையா?
சீதையாய் நீயெந்தென்
........சிந்தைக்குள் நிற்கையில்
கோதையர்பின் போவேனா கூறு?!

நாட்பது வந்ததுமே
........நாய்போல ஆனேனா?
கேட்பார் உரையெல்லாம்
........கேட்டென்னைச்- சாட்டாதே
எம்பது வந்தாலும்
.......இப்படித்தான் என்றைக்கும்
உம்பாதம் தாங்கும் உடல்!

✍️செ. இராசா

No comments: