20/01/2022

உன்னைப்போல யாரும் இல்லைம்பான்

 


உன்னைப்போல யாரும் இல்லைம்பான்
கவனம்.... கவனம்
உன்னைவெல்லும் பேச்சே இல்லைம்பான்
கவனம்...கவனம்

உன்னாலவன் மேலே ஏற
உன்னைப்படி ஆக்கப் பார்ப்பான்
சொன்னபடி செய்வேனென்று
சொக்குப்பொடி போட்டுப் பார்ப்பான்
தூண்டில்புழு போலமாட்டி
தூண்டிவிட்டு ஆழம் பார்ப்பான்...
எந்த மீனும் சிக்கலைன்னா
என்ன நட்டம்? வேற பார்ப்பான்...

வந்தவரை லாபம்தானே
வாழ்ந்தவரை வாழ்க்கை தானே...
சொந்தக்கதை சோகம்தானே
சொன்னதெல்லாம் உண்மைதானே...
ஆனா ஒன்னு சொல்றேன் மச்சி
ஆண்டவன்லாம் இல்லை மச்சி
என்ன இது வாழ்க்கை மச்சி
எல்லாமிங்கே போலி மச்சி...

✍️செ. இராசா

No comments: