22/01/2022

வீட்டுக்கு வீடு வாசப்படி

ஒரே சண்டை
ஒரே குழப்பம்
களங்கியது மனம்
கண்களில் குளம்...
எதுவும் புரியவில்லை
இந்நேரத்தில் ஓர் அழைப்பு;

"அம்மா... சொல்லுங்கள்"
.........
அப்பா....அப்பப்பா...
மூச்சே விடாமல்
முப்பது நிமிடங்கள்..
அவ்வளவும் குற்றப்பத்திரிக்கை
அழைப்பு துண்டிக்கப்படுகிறது!

இப்போது மனம் தெளிவடைகிறது
வீட்டுக்கு வீடு வாசப்படி

✍️செ. இராசா

No comments: