17/01/2022

சபையறிந்து பேசு -------- வள்ளுவர் திங்கள் 194 (கவிதை-2)

 குடிக்கும் சபையைக் குறளரங்கம் ஆக்கி
அடிக்கும் நபரை அடி
(1)

குறளோதும் மன்றத்தில் கூடிய பின்னால்
உறங்கும் நபரை உதை
(2)

தமிழ்கூறும் நல்லரங்கில் தங்கிலீசு என்றால்
அமிலத்தை அள்ளி அடி
(3)

ஆன்மீகக் கூட்டத்தில் ஆபாசம் பேசினால்
சான்றோராய் எண்ணாமல் சாத்து
(4)

சிறுவர்கள் பள்ளிக்குச் சேக்கிழார் வந்தால்
சிறுகவி தந்தால் சிறப்பு
(5)

வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தபின்னும்
வேலையைப் பேசுபவர் வீண்
(6)

இலக்கிய மன்றத்தில் எக்கருத்தும் பேசார்
இலக்கியச் செம்மலாம் இங்கு
(7)

இணைய அரங்கத்தில் எல்லோரும் பார்க்கத்
தனைத்தான் புகழ்வாரைத் தள்ளு
(😎

பேசுபவர் பேச்சைப் பெரிதாக எண்ணாமல்
பேசுபவர் பேச்சாப் பெரிது?!
(9)

சபைக்குத் தகுந்தாற்போல் சால்பாகப் பேசல்
சபையாளும் வல்லமையின் சான்று
(10)

✍️செ. இராசா

No comments: