31/01/2022

புகைக்குச்சி

 


நீ முழுதாய் இருந்தபோது
லாக்கரில் வைத்த பொன்நிலவானாய்...
நீ வெளியே வந்தபோது
விடுதலையடைந்த பெண்நிலவானாய்...
நீ இதழேறியபோது
விரல்களில் பூத்த வெண்நிலவானாய்...
நீ விடுபட்டபோது
எரிந்து தணிந்த பிறைநிலவானாய்..
......
உண்மையைச் சொல்?
நீ புகைக்குச்சியின் எச்சமா? இல்லை
உயிர்க்கொல்லியின் மிச்சமா?!

✍️செ. இராசா

No comments: