18/01/2022

கத்தாரில் 50ஆம் வருடப் புத்தகக் கண்காட்சி

 




கத்தாரில் 50ஆம் வருடப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. முன்கூட்டியே இணையத்தில் பதிவுசெய்து குழந்தைகளையும் அனுமதிக்கும் நேரமான மாலை 4:00 மணிக்குமேல்தான் கிளம்பினோம். வாகன நிறுத்தத்திற்கு பணமெல்லாம் வாங்கவில்லை. ஆனால் மிகப்பெரிய வரிசை காத்திருந்தது.பையனை அனுமதிக்க ஊசிபோட்டதற்கான சான்றிதழையெல்லாம் காட்டித்தான் உள்ளே விட்டார்கள். பாப்பாவை அனுமதிக்க மீண்டும் வேறு வரிசையில் வரச்சொன்னார்கள். எப்படியோ அடித்துப் பிடித்து உள்ளே போனால் நிறைய அரபிக்கடைகளாகவே இருந்தது. அரபிகள் அள்ளிச்சென்றதைப் பார்க்கையில் எத்தனைபேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒரே ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் விலைகேட்டேன். வெளியே உள்ளதைவிட அதிகமாகவே விலை வைத்துள்ளார்கள் என்பதால் நாங்கள் வாங்கவில்லை. இருப்பினும் இப்போதும் இத்தனை நூல் விரும்பிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு வருகிறார்கள் என்பதைப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆம்....செல்வத்தால் உயர்ந்த நாடு கல்வியறிவிலும் உயர இப்பேர்பட்ட புத்தகக் கண்காட்சிகள் தேவையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாதுதான். ஆமாம்...நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?!
 
✍️செ. இராசா

No comments: