26/01/2022

சுதந்திர தினம்னா என்னப்பா?

 



இப்ப நான் உன்கைய சின்ன வயசுல இருந்து விடாமப் பிடிச்சிக்குட்டே இருக்கேன். பிறகு நான் என் கையை விட்டா என்ன செய்வ?.....சுதந்திரமா ஓடுவியா இல்லையா?!..அப்படி இந்தியாவைப் பிடிச்சு வைத்திருந்த இங்கிலாந்துகாரங்க நம்மள சுதந்திரமா விட்டுட்டு அவுங்க ஊருக்கே போன தினம்தான் சுதந்திர தினம்.
 
அப்ப....#குடியரசு_தினம்னா என்னப்பா?
 
இப்ப நான் உன் கைய விட்டுட்டேங்குறதுக்காக நீ பாட்டுக்கு உன் இஷ்டப்படி அங்க இங்க ஓடாம, நல்லா படிச்சு நல்லா வளர்ந்து ஒரு பொறுப்புள்ள குடிமகனா வாழணுமா இல்லையா?!....அப்படி நாம சுதந்திரம் பெற்றதுக்குப் பிறகு நாமே சட்டதிட்டெங்கெல்லாம் போட்டு முழு அங்கீகாரமுள்ள நாடா நிமிர்ந்த தினம்தான் குடியரசு தினம்.
 
இந்தியா பாகிஸ்தான் என்று நம் நாடு இரண்டாகப் பிரிந்தபோது, நம்மவர்கள் அம்பேத்கர் தலைமையில் அமைத்த வலுவான சட்டதிட்டங்களால் 1950ல் நாம் நிமிர்ந்தோம். ஆனால் பாகிஸ்தானுக்கோ மேலும் ஆறு வருடங்கள் கூடுதலாகத் தேவைப்பட்டு1956ல்தான் அவர்களுக்கான சட்டங்கள் கிடைத்தது. ஆனால், அந்நாட்டில் இராணுவ ஆட்சிகள் அதிகமாக நடந்தமைக்கும் அவர்களின் அரசியலமைப்பில் உள்ள நிலையற்ற தன்மைக்கும் நம்மைப்போல் வலுவில்லா அடித்தளமே காரணமாக உள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் ஒரு விடயத்தில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அது என்னவென்றால் சுதந்திரம் வாங்கும்போதே நிலத்தைப்பிரித்துக் கொள்வது. அந்த விடயத்தில் ஏமாந்தவர்கள் நம் ஈழத்தமிழ் உறவுகளே. நம்பி ஏமாறுவதும் தமிழனின் குணம்தானோ?! 
 
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், வலுவான கட்டமைப்பு இல்லாவிடில் அங்கேக் குழப்பங்கள் தவிர்க்க முடியாததாகிறது. அந்த விடயத்தில் நம் குடியரசு நாடான இந்தியா எவ்வளவோமேல். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.
 
வாங்க...வாங்க...ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
🙏
இனிய குடியரசு தின
வாழ்த்துகள்
 

செ. இராசமாணிக்கம்

No comments: