20/01/2022

மயிர் வழிக்க வந்தநீ

 


மயிர் வழிக்க வந்தநீ
மயிரை மட்டுமா வழித்தாய்??

பென்சில்கள் தலை சீவப்
பல்லில்லா சீப்பானாய்..
பேனாக்கள் பிழை செய்தால்
சுரண்டித்தரும் உளியானாய்..

பிட்பாக்கெட் புரிவோரின்
ஆறாம் விரலானாய்..
அடிதடி புரிவோரின்
அடுத்த நாக்கானாய்...

இதுமட்டுமா?!
ஏழைகளின் வீட்டு நெகவெட்டியானாய்
பூக்கடைக் கூடைக்குள் கத்தியானாய்
காகிதத்தை பிளக்கும் கூர்வாளானாய்
இத்தனையும் ஆனாய்....
இறுதியில் இப்படிப்
பேசிக் கழுத்தறுப்போர்க்கும்
பிளேடென்ற உவமையானாயே..

✍️செ. இராசா

தலைப்பு: திரு சரவணா சத்யநாராயணா ஆசிரியர் அண்ணா💐💐💐💐

No comments: