05/01/2022

குரு அளித்த பரிசுக்கிழி

 


இது இந்திய ரூபாய் நூறு...

ஆனால்;
சித்தனின் பார்வையில்
இது காகிதம்...

பித்தனின் பார்வையில்
இது ஏதோ ஒன்று...

குழந்தையின் பார்வையில்
நிறைய சாக்லேட்கள்..

குடிமகனின் பார்வையில்
ஒரே ஒரு கட்டிங்..

பாட்டாளியின் பார்வையில்
இது வியர்வைத்துளி..

இந்தப் பாட்டாள்வோன் பார்வையிலோ
இது பெரும் பரிசுக்கிழி...

ஆம்...
எம் குரு விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா
எமக்கெல்லாம் அளித்த பரிசுக்கிழி...

நன்றி அண்ணா

No comments: