06/01/2022

வீழ்வேனென்று நினைத்தாயோ?

 

கடலோடியும் தமிழாளிவன்
...கரையேறியே வருவான்!
நடமாடிடும் சிலைபோலவே
...நடைமாற்றியே தருவான்!
இடமேயினி இனிதாகிட
...இசையாகியே மொழிவான்!
உடனேயொரு கவியாயவன்
... உயிர்மூச்சிலே விடுவான்!
 
புதிரானவன் இவனாஅவன்
...புகழானவன் என்றே!
விதிமாறிட வினைமாறிட
...விளையாடிடு நன்றே!
மதியாதவர் நிலைமாறிட
...மனம்மாறிட இன்றே!
சுதிகூடிட சுவையேறிட
...சுயமாகிடு வென்றே!
 
✍️செ. இராசா

No comments: