03/01/2022

மறவாமை ----- வள்ளுவர் திங்கள் - 192

 
வரச்சொல்லி பின்னே மறந்ததாய்ச் சொல்வோர்
வரமாட்டார் என்றும் விடு
(1)

மதிக்க மறந்தாரை வைக்குமிடம் வைத்து
மதிப்பு குறையாமல் வாழ்
(2)

மறதிபோல் மாமருந்து வையகத்தில் இல்லை
மறப்பதை மட்டும் மற
(3)

அறத்தை மறந்தால் அழிவுதான் கிட்டும்
மறவாமை வேண்டும் மதி
(4)

புகழும் பணமும் பொசுக்கென்று போ(க்)கும்
அகந்தை நிறைந்த அகம்
(5)

உண்மை உறவை உதறிடும் மாந்தர்கள்
பண்பை மறந்தப் பதர்
(6)

செய்த உதவியைச் சிந்தையில் வைக்காதோர்
உய்ய வழியெங்கே உண்டு?!
(7)

கானலை நீரென்றுக் காண்கின்ற வையகத்தில்
கோணலும் நேரென்பர் கூற்று
(8.)

அரசியல் வாதிபோல் அள்ளிவிடும் மாந்தர்
உரைப்பவை எல்லாம் உதார்
(9)

ஏமாற்றி ஏமாற்றி ஏறிமேல்ச் செல்பவர்கள்
ஏமாற்றம் ஆதல் இயைபு
(10)

✍️செ. இராசா

No comments: