24/01/2022

இறைவனடி --------- வள்ளுவர் திங்கள் 195



 

ஒற்றை நூலால் உலகளந்த வள்ளுவனைப்
பற்றிட யார்க்கும் பலன்
(1)

இரண்டே அடியில் எழுதிய பாக்கள்
அரணடி சேர்க்கும் அறி
(2)

முப்பால் வழங்கிய மூத்தோன் அடிகளைத்
தப்பாமல் பற்றுதல் சால்பு
(3)

நான்மறை எல்லாம் வடதிசை நாட்டார்க்கு
வான்மறையே வையப் பொது
(4)

ஐந்தை அடக்குகிற ஆன்மீகம் கண்டறிய
பைந்தமிழ் வேதம் படி
(5)

ஆறா வலியையும் ஆற்றுகின்ற வல்லமை
மாறா மறைக்குள்ளே உண்டு
(6)

எழுசீரில் ஏற்றிய எம்பாட்டன் குறளைத்
தொழுகின்ற வேளையில் சொல்
(7)

எண்திசை யாவிலும் எல்லோர்க்கும் சென்றால்தான்
பண்ணிய நூலின் பயன்
(😎

ஒன்பது கோளுக்கும் ஓர்மையம் போலே
அன்பர்கள் மையம் அவன்
(9)

பத்துத் தலைக்குள்ளும் பற்றிய காமத்தீ
பத்தியதன் காரணம் பற்று
(10)

✍️செ. இராசா


No comments: