15/04/2019

கண்பேசும் வார்த்தைகள்



கண்ணும் கண்ணும் கவ்வுகையில்
என்னுள் பாயுதே மின்னோட்டம்- உயர்
அழுத்தம் அதிகம் கூடுகையில்
எழுந்து வருகுதே கவியோட்டம்!

வார்த்தை எதுவும் இல்லாமல்
கோர்த்து பேசுதே கண்ணோட்டம்- நான்
உன்னுள் வந்து சேர்ந்திடவே
என்னுள் ஓடுதே உயிரோட்டம்!

காலை மாலை புரியாமல்
ஆளை மயக்குதே விழியோட்டம்- இது
நாளை வரைக்கும் நில்லாமல்
மாலை மாத்துகிற வெள்ளோட்டம்!

✍️செ. இராசா

No comments: