28/04/2019

நீ ஒதுங்கிய படகல்ல


ஆறறிவைச் சுமந்த நீ
ஓரறிவையும் சுமந்து
அன்பினைப் போதிக்கிறாய்!

வாழ்ந்தபோது உதவிய நீ
ஓய்ந்தபோதும் உதவி
அறத்தினைப் போதிக்கிறாய்!

நீரிலே ஓடிய நீ
நிலத்திலே நின்று
நிலையாமை போதிக்கிறாய்!

மரமாய்ப் பிறந்த நீ
மறையும் தருணத்திலும்
செய்ந்நன்றி போதிக்கிறாய்!

யாராலோ வந்த நீ
யாவரையும் கரையேற்றி
வாழ்வையேப் போதிக்கிறாய்!

நீ ஒதுங்கிய படகல்ல
எமை உணர்த்திய படகு

✍️செ. இராசா

No comments: