05/04/2019

#அப்பாவின்_குறட்டை

இரவுக் காட்டிற்குள்
இடைவிடாத இம்சை நீ..
இயந்திரப் பேரிகைபோல்
இடிக்கின்ற இரைச்சல் நீ..
உறங்கவே விடாமல்
உறுமுகின்ற சிறுத்தை நீ..
ஆயிரம் இருந்தாலும்
அப்பாவின் சுவாசம் நீ...
#அப்பாவின்_குறட்டை
✍️
(“எங்கே அப்பாவக் காணோம்... குறட்டைச் சத்தம் கேட்கவே இல்லை” என்றுகூறியவாறே மகள் என்னை அதிகாலையில் தேடியபோது தோன்றிய வரிகள்)

No comments: