07/04/2019

நீ உண்மையில் நல்ல அத்தரே.


உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்- என்
சுவாசக் காற்றை
சுவீகாரம் செய்கிறாய்..

உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்- நீ
மணக்கும் வித்தையால்
மயக்கி விடுகிறாய்...

உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்-நம்
உறவின் உரசலை
ஊருக்கேச் சொல்கிறாய்..

நீ உண்மையில் நல்ல அத்தரே..

✍️செ. இராசா

No comments: