01/04/2019

நீ நல்ல ஆட்டுக்கால் பாயாவே...



அதிகாலை நேரம்..
அவசர வேகம்..
குதித்துத் தாவிக்
குளித்து வந்தால்

மல்லிகைப் பூவை
மய்யமாய் வைத்து- நீ
மணக்கும் குமரியாய்
மயக்கி விட்டாய்

கொதிக்கும் மனதிலே
கொஞ்ச வைத்து- நீ
நாக்கில் நீரினைக்
கூட்டி விட்டாய்...

காலில் சக்கரம்
கட்டியவனை- உன்
காலைப் பிடித்திடச்
செய்துவிட்டாய்..

உண்மையில்
நீ நல்ல ஆட்டுக்கால் பாயாவே...

No comments: