21/04/2019

கணினி--வாட்சப்-விக்கி நீ



கணினியின் மென் பொருள்போல்- என்
கவிதையின் கருப் பொருளே...

ஆண்டிராய்டின் செயலியைப்போல்- என்
ஆன்மாவின் உட் பொருளே..

வாட்சப்பின் புதுக் குழுபோல்- என்
வார்த்தையின் பொதுப் பொருளே..

முகநூலின் மாயையைப்போல்- என்
அகநூலின் மறை பொருளே!

கூகுளாய் நீ வந்தால்- உன்
கோகுலாய் நானாவேன்!

விக்கியாய் நீ வந்தால்- நீ
சொக்கிடும் கவியாவேன்!

#வருவாயா...?!!!

✍️செ. இராசா

No comments: