14/04/2019

வானம் வசமாக


அழகு முத்துகள் வேண்டுமென்றால்
ஆழக் கடலுக்குள் மூழ்கிடுவாய்!
மின்னும் வைரங்கள் வேண்டுமென்றால்
மண்ணின் ஆழத்தில் சென்றிடுவாய்!

வாழ்வை வளமாக்க வேண்டுமென்றால்
வாட்டும் வருத்தத்தை உதறிடுவாய்!
வானம் வசமாக வேண்டுமென்றால்
மீண்டு(ம்) விழிப்போடு முயன்றிடுவாய்!

✍️செ. இராசா

No comments: