30/04/2019

#கலங்காதிரு_மனமே





#கலங்காதிரு_மனமே கலங்காதிரு
கதியின்றிப் போனாலும் கலங்காதிரு
கலங்காதிரு மனமே கலங்காதிரு
கல்மழையே பொழிந்தாலும் கலங்காதிரு

உருவத்தில் பெரிதான யானை கண்டும்
உள்ளத்தில் கலங்காதப் புலியைப்போல
உலகத்தில் பெரிதான இன்னல் கண்டும்
ஒழுக்கத்தில் தவறாத பண்பைக் காட்டு!

எண்ணிக்கை மிகையான படையைக் கண்டும்
எண்ணத்தில் கலங்காத வீரன்போல
அன்பான உறவெல்லாம் உதறும் போதும்
என்றைக்கும் மாறாத அன்பைக் காட்டு!

No comments: