11/04/2019

குருவாயூர் மன்னா




குருவாயூர் மன்னா
.......குழலூதும் கண்ணா!
கருமேகம் விஞ்சும்
.......திருமேனி வண்ணா!
உருவாகி மீண்டும்
.......உரையாட வாடா!
உயிராகி மண்ணில்
......ஒளியேற்றம் தாடா!

பார்த்தாவின் நேசாநல்
........பாஞ்சாலி நண்பா!நீ
பார்த்தாலே பத்திக்கும்
........பாராளும் தோழாயிப்
பாரதம் பொங்கியெழ
........பாரினிலே வாடாயென்
பா-ரதம் பொங்கியெழ
.......பைந்தமிழைத் தாடா!

✍️செ. இராசா

பாடலாக கேட்க இங்கே தொடவும்;

https://www.facebook.com/100000445910230/posts/2450489231642583?sfns=mo


https://youtu.be/5ggJN9MWXPE 

No comments: