05/04/2019

நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால்



கடல்நீரின் உப்பை எல்லாம்
காணாமல் செய்திடுவேன்...

சித்திரை வெயில் குறைக்க
ஸ்டேடஸ் போட்டிடுவேன்....

செவ்வாய்க்கு போவோர்க்கு
சிறப்பு நிதி வழங்கிடுவேன்...

டாஸ்மாக்கை குறைப்பதற்கு
ட்ரம்புக்கு மணு அளிப்பேன்...

முகநூலில் எழுதுவோர்க்கு
முன்னுரிமை அளித்திடுவேன்

(அனைத்தையும் சொன்னால் எதிர்க்கட்சிகள் திருடிவிடும் என்பதால் மற்றவை ஆட்சிக்கு வந்த பின்னர்.....)

✍️செ. இராசா

No comments: