02/07/2017

தமிழ்ப்பட்டறை



எழுத்துத் தமிழ் சிறப்புறவே
தமிழ்ப்பட்டறைத் தளம்மூலம்
எழில்தமிழ் வளம்காக்கும்
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரு மூச்சு!
எப்பொழுதும் தமிழ் மூச்சு!
என்நேரம் தமிழ் தாகம்!
எல்லோர்க்கும் ஒரே நோக்கம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
எனக்குள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எடுத்தாளும் ஆளுமையால்
எழுத்துப்பட்டறை ஆகியதோ?!
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கிறதே!!!

என்தமிழ் உறவுகள்
என்றென்றும் சிறப்புறவே
என் மனமார வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறைத் தலைவரையும்
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
என் மனம் மொழி இரண்டாலும்
என்வழியில் வாழ்த்துகிறேன்!
எம்சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!

செ. இராசா

No comments: