24/07/2017

எப்ப அண்ணே வருவீக--- எசப்பாட்டு

ஆத்தாள விட்டுப்புட்டு
அப்பனையும் விட்டுப்புட்டு
ஊருக்கு போன அண்ணேன்........
எல்லாரும் கேக்குறாக .....
எப்ப அண்ணே வருவீக....

காசு பணம் சேக்கனுன்னு
கண்ணாலம் கட்டனுன்னு
வெளிநாடு வந்தேன்டா....தம்பி
கருவாடு ஆனேன்டா.......
காசுதாண்டா சேரவில்லை....

என்னண்ணேன் சொல்லுறீக?..
விவசாயம் செத்துப்போச்சு......
காணி நிலமும் வித்து போச்சு
காசு பணம் வேணுமுன்னு
கடன்காரன் வர்ரான் அண்ணேன்.....

என்னடா தம்பி செய்யுறது........
நாலு வருஷம் ஓடிடுச்சு
நம்ம கடன் அடையலயே......!
ஊரு விட்டு வந்ததால
உள்ளதும் போச்சுதேடா..........?!

No comments: