11/07/2017

விழியால் கதை எழுது--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (61) பங்குபெற்ற கவிதை


என்னவளின் கண்ணழகை
என்னவென்று சொல்லிடுவேன்?!
எழுத்துக்களால் அவ்வழகை
எப்படிநான் எழுதிடுவேன்?

விழியால் கதை எழுதும்
விந்தையினைச் சொல்லவா?- அவள்
விழிபேசும் கவிதையினால்
வியந்த கதை சொல்லவா?

விழிக்கின்ற நேத்திரங்கள்
விடிவெள்ளி அல்லவா?-அவள்
சொக்குகின்ற பார்வைகளோ
சொர்க்கங்கள் அல்லவா?

கண்களிலே பேசும்மொழி
காவியங்கள் அல்லவா?!-அவள்
காதல்மொழி பேசுகின்ற
காரிகையவள் அல்லவா?!

வில்புருவ விழியழகி
என்னவளே அல்லவா?-அவள்
விழிஇரண்டைப் போற்றுவதும்
என்கடமை அல்லவா?!

------செ. இராசா------

No comments: