11/07/2017

திருதராஷ்டிரன்


பாரதக் கதையினில் ஒரு பாத்திரம்!
பிறந்தது புகழ்பெற்ற குரு கோத்திரம்!

பெற்றது பார்வையற்ற இரு நேத்திரம்!
பெற்றதும் பாசமற்ற நூறு தரித்திரம்!

கற்றது பீஷ்மர்வழி பல சாத்திரம்!
கற்காதது தர்மம் அறம் மாத்திரம்!

பாண்டவர்மேல் கொண்டது பல ஆத்திரம்!
பாழ்சகுனியால் கண்டது பல சூத்திரம்!

புறக்கண்கள் மறைந்ததில் இல்லை விசித்திரம்!
அகக்கண்களும் மறைந்ததுதான் அவர் சரித்திரம்!

No comments: