11/07/2017

ஆத்திகனாய் மாறிய நண்பனுக்கு




கிருஷ்ணனை வாசித்து
கிருஷ்ணனை நேசித்து
கிருஷ்ணனை சுவாசித்து
கிருஷ்ணனாய் மாறிய
கிருஷ்ண(நாக)ராஜாவிற்கு
இனிய பிறந்த நாள் வணக்கங்களையும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
மனமார கூறிக்கொண்டு
மனவரிகளைப் பதிகின்றேன்;

ஓ. சிறுவயலில் பிறந்தவனே...
ஓஹோவென வளர்ந்தவனே...
ஒதுங்கியே இருந்தாய் நாத்திகனாய்..
ஒருநாள் மாறினாய் ஆத்திகனாய்!
ஒரிரு வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு ஞான யோகியாய் மாறிவிட்டாய்!

ஒதிடும் மறைகளைச் சொல்கின்றாய்...
ஒராயிரம் நாமங்கள் கதைக்கின்றாய்...
ஓருஒரு வேதமாய் படித்தேதான்
ஒவ்வொரு படியாய் கடக்கின்றாய்
ஒவ்வொரு நாளும் எங்களுக்கும்
ஒளியை கதையால் தருகின்றாய்!

எப்படி மாறினாய் இப்படியாய்
என்றே பலரும் நினைக்கின்றார்!
அப்படி இப்படிப் போகாமல்
அருள்படி சென்றதால் வியக்கின்றார்!
முறைப்படி நீயும் சென்றதற்கு
முதல்படி யாதென கேற்கின்றார்!

உன்னிடம் பழகிய நட்பினிலே
உணர்ந்ததை உரைக்கிறேன் உரிமையிலே!
உன்பாதை மாற்றிய அக்கதையை
ஊருக்கு உரைப்பதும் நற்செயலே!
விருட்சஞான விதை தூவிய
விஜய்டிவி மஹாபாரதக் கதையதுவே!

நண்பனாய் தமையனாய் ஒருவார்த்தை
நானும் உன்னிடம் வேண்டுகின்றேன்!
நன்மையை தந்திடும் கதைகளையும்
நீயும் தினம்தினம் எழுதிடுவாய்!
நாளும் நாங்களும் வாசிக்க
நாளுக்கு ஒன்றாய் பதிவிடுவாய்!

வாழ்க வளமுடன்!
கிருஷ்ணார்ப்பணம்!

No comments: