02/07/2017

சிற்பியையும் சிற்பக்கலையையும் வாழ்த்திடுவோம்



கல்லில் ஒளிந்த கடவுளையும்
கண்ணில் தெரியச் செய்கின்ற
கருணைக் கடலாய் உள்ளவனை
கரங்களால் வணங்கிட வேண்டாமா?!


மனதில் உதித்த மறைபொருளை
கனவில் தோன்றிய மனஉருவை
கற்பனை கலந்து வடிக்கின்ற
கலையைப் போற்றிட வேண்டாமா?!

 வள்ளுவன் சிலையை வடித்தவனின்
ஒளவையை அழகுறச் செய்தவனின்
கண்ணகி கோபத்தைச் சொன்னவனின்
சிறப்பினை வாழ்த்திட வேண்டாமா?!

வாழ்க சிற்பிகள்! வாழ்க வளமுடன்!
வாழ்க சிற்பக்கலை! வாழ்க வளமுடன்!


(புகைப்படத்தில் உள்ள வள்ளுவர் சிலை அடியேன் வீட்டில் நிறுவியுள்ளேன் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தி, இச்சிலை செய்த சிற்பிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்திக்கொள்கிறேன். நன்றி ஐயா)

No comments: