24/07/2017

மனமார்ந்த வாழ்த்துக்கள்

கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!


எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

----- செ. இராசா-----

No comments: