19/07/2017

மனதோரம் மழைச்சாரல்/ கவிச்சாரல்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (62) பங்குபெற்ற கவிதை


மனதோரம் மழைச்சாரல்
வருகின்ற நன்நேரம்
மனம்பேசும் கவிச்சாரல்
வரிகளாய் வடியாதோ?!


மனதோரம் புதைந்துள்ள
மலிவான ரகசியங்கள்
கண்ணீரில் கவியாகி
கரைந்துருகிப் போகாதோ?!

மனதோரம் வழிகின்ற
வீணான சபலங்கள்
மறைபோன்ற நல்கவியால்
வீழாமல் தடுக்காதோ?!

மனதோரம் எரிக்கின்ற
கணங்களின் நினைவலைகள்
மருந்தான கவிகளினால்
கனத்தினை குறைக்காதோ?!

மனதோரம் உதிக்கின்ற
சிலகவிகள் நம்நெஞ்சில்
மனத்தினை மாற்றுகின்ற
சிறுபொறி ஆகாதோ?!

மனதோரம் மலர்கின்ற
மணம்வீசும் கவிகளினால்
மடியாத காதல்களும்
மணம்செய்யத் துடிக்காதோ?!

-------செ. இராசா-------

No comments: