24/07/2017

விவேகானந்தர் பொன்மொழிகள் (எனது பாணியில்)


கண்ணுக்கு புலப்படும் கடவுள் என்றே
அண்ணனும் தம்பியும் நினைத்திட வேண்டும்!
கண்ணில் காணா கடவுளை எல்லாம்
அதற்குப் பிறகே வழிபட வேண்டும்!


அன்பு குறைந்தால் மரணம் என்றே
அகிலம் உண்மையை உணர்ந்திட வேண்டும்!
அன்பு விரிந்தால் வாழ்க்கையும் விரிந்திடும்
அகிலத்தின் சிறப்பை அறிந்திட வேண்டும்!

உண்மை நேர்மை உள்ளவர் என்றால்
உலகம் எதிர்த்தால் எதிர்த்திட வேண்டும்!
நம்மால் எதுவும் முடியா தென்ற
நினைப்பை நினைவினில் நீக்கிட வேண்டும்!

அகத்தினில் விழித்திடும் கலைகளைப் பயின்று
மின்னலின் வேகத்தில் எழுந்திட வேண்டும்!
அடிமன எண்ணம் அடைந்திடும் வரைக்கும்
மின்னலின் வேகத்தில் உழைத்திட வேண்டும்!

No comments: