11/07/2017

ரயில் பயணத்தில் வாழ்க்கைப் பயணம்


பணத்தின் அளவைப் பொறுத்தேதான்
பயணிக்கும் வகுப்பு முடிவாகும்!
பணத்தின் இருப்பு கனத்திருந்தால்
பயணிக்கும் வகுப்பு முதலாகும்!

முன்வினை அளவினைப் பொறுத்தேதான்
நன்மையும் தீமையும் நடந்தேறும்!
முன்வினை நல்வினை செய்திருந்தால்
நன்மையும் நமக்காய்க் காத்திருக்கும்!

பயணம் செய்கின்ற அனைவருமே
பயணத்தை நாளும் தொடர்கின்றார்!
பயணத்தின் அலுப்பைப் போக்கிடவே
பாடியும் ஆடியும் மகிழ்கின்றார்!

பாடலை ரசித்திடும் அனைவருமே
பாடலில் காலத்தை மறக்கின்றார்!
பாடலின் ராகம் முடியுமுன்னே
பாதியில் சிலரோ செல்கின்றார்!

பயணத்தின் தூரம் முடியுமுன்னே
பிறருக்கு தர்மம் செய்திடுவோம்!
பண்பும் அன்பும் குறையாமல்
பயணத்தை இனிதாய் கழித்திடுவோம்!

செ. இராசா

No comments: