22/06/2017

இன்றைய பள்ளிக்கூடங்கள்



பள்ளிகள் தருகிற தொல்லைகளால்- பலர்
படுகிற வேதனை கொஞ்சமில்லை!
பணத்தை பறிக்கிற பள்ளிகளில்- நல்ல
பண்பை படிப்பிக்க எண்ணமில்லை!

மனனம் செய்கிற கல்வியினால்- பலர்
மறைபொருள் யாதென அறிவதில்லை!
மதிப்பெண் குறைகிற மாணவனை-நல்ல
மதியில்லை என்பது சரியில்லை!

குறைவாய் படிக்கிற மாணவனை- ஒரு
குறையாய் சொல்வது நியாயமில்லை!
குறையாய் காண்கிற பள்ளிகளோ- அந்த
குறையை நீக்கிட முயல்வதில்லை!

குற்றங்கள் சுமத்திடும் பள்ளிகளால்- பல
குடும்பத்தில் குழப்பங்கள் தீர்வதில்லை!
குடும்பமும் கூடமும் ஒன்றானால்- ஒரு
குடிமகனும் நம்முள் கெடுவதில்லை!

பணமே குறியாய் நினையாமல்- நல்ல
படிப்பைத் தருவதே அறமாகும்!
பண்பின் மாண்பினைத் தவறாமல்- நல்ல
பள்ளியாய்த் திகழ்ந்தால் சிறப்பாகும்!

No comments: