27/07/2017

அப்துல்கலாம் ஐயா நினைவாஞ்சலி



 (நாட்டுப்புறப் பாடல் வடிவில்)

ஐயாவபத்தி எழுத நானும்
ஆசை வச்சேங்க!
ஐயாமாரே பிழை இருந்தால்
என்னை மன்னியுங்க!

ராமேஸ்வரம் தீவு- நம்ம
புனித பூமிங்க!
ஐயா பிறந்ததாலே- அதுக்கு
இன்னும் பெருமைங்க!

பள்ளியிலே படிக்கும்போதே-பல
பணிகள் செஞ்சாருங்க!
படுத்தும்வறுமை வந்தபோதும்-அவர்
படிப்பில் கெட்டிங்க!

கல்லூரியில் படிக்க- ஐயா
திருச்சி போனாருங்க!
அதுக்கு மேல படிக்க- ஐயா
சென்னை போனாருங்க!

பணிகளிலே திறமையாக-நல்ல
புதுமை செஞ்சாருங்க
நம்மநாடு வளர்ந்திடத்தான்-ஐயா
நிறையா செஞ்சாருங்க!

செயற்கைகோள்கள் செஞ்சு- ஐயா
நிறைய விட்டாருங்க!
ஏவுகணைகள் செஞ்சு- ஐயா
ஏவி விட்டாருங்க!

நம்ம நாட்டு மூளையாலே- ஐயா
நாட்டை காத்தாருங்க!
ஆன்மீகமும் பேசி- ஐயா
அன்பு செஞ்சாருங்க!

பார்த்த நாடு எல்லாருமே
பயந்து போனாங்க!
கலாம் ஐயா பேரச்சொன்னால்
கலங்கிப் போனாங்க!

குடியரசுத் தலைவராக- ஐயா
சேவை செஞ்சாருங்க!
குறையில்லாத தலைவராக- ஐயா
சிறப்பு செஞ்சாருங்க!

அப்துல்கலாம் ஐயாவால
நமக்குப் பெருமைங்க!
அவருமட்டும் இல்லையினா
நிறைய இல்லீங்க!

எதிர்காலம் ஐயாபேர
நினைச்சு போற்றுங்க!
என்றைக்குமே ஐயா புகழ்
நிலைச்சு நிக்குங்க!

--------நன்றி--------

யார் அவர்?

அன்பின் உருவமவர்!
ஆற்றலில் அணுசக்தியவர்!
இளைஞர்களின் இதயமவர்!
ஈகையின் இருப்பிடமவர்!
உண்மையின் உறைவிடமவர்!
ஊழலின் எதிரியவர்!
எளிமையின் அடையாளமவர்!
ஏற்றத்தின் உச்சமவர்!
ஐயரில் ஐயரவர்! (ஐ- தலைவன்)
ஒரு குறையும் இல்லாதவர்!
ஓர் குறள்போல் உயர்ந்தவர்! (ஓர்- ஒப்பற்ற)
ஔதாரியம் (பெருந்தன்மை) நிறைந்தவர்!
அஃதே ஐயா அப்துல் கலாம்!


மதங்களைக் கடந்து
மனிதத்தால் உயர்ந்த
மகா ஆத்மா அவர்!
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!

----- செ. இராசா-----

No comments: