08/03/2022

வள்ளுவ வாழ்வியல்

 #வள்ளுவ_வாழ்வியல்

வள்ளுவர் திங்களன்று வார்த்தகவி எத்தனையோ?!!
உள்ளத்தில் என்றும் உவப்பு!
(1)

வள்ளுவச் சிந்தனையை வைத்திடும் எண்ணத்தில்
கொள்கையாய்ச் செய்வோம் குறள்.
(2)

வள்ளுவ தாசனென்று வார்த்தையிலே நில்லாமல்
வள்ளுவம் போற்றுவதெம் வாழ்வு!
(3)

திருக்குறள் சிந்தனைகள் தேசமெல்லாம் சென்றால்
ஒருபோதும் மாறா(து) ஒழுங்கு
(4)

இரண்டடிக்குள் எப்படி இவ்வளவு சொன்னார்
மிரண்டபடி தோன்றும் விழிப்பு
(5)

No comments: