30/03/2022

இட்லி வெண்பாக்கள்

 


சட்னியும் சாம்பாரும் சந்திக்கும் மையத்தில்
இட்லியைத் தொட்டால் இனிது!
(1)
 
உலக அரங்கில் உயர்ந்த உணவாய்
உலவும் உணவினை உண்!
(2)
 
உளுந்தும் அரிசியும் ஒன்றாய்க் கலந்தே
புளித்தபின் ஆவதென்னப் பூ?
(3)
 
ஆவியில் வேகின்ற அற்புத இட்டலியை
நாவின்மேல் வைத்து நசுக்கு
(4)
 
பீட்ஸா பருகரென பீற்றுகின்ற பீட்டர்கள்
ஊட்டம் அறியா உதார்!
(5)
 
சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை இல்லையெனச்
செப்பிடும் கூற்றுகள் தப்பு
(6)
 
ஓட்சே உயர்வென ஓதுகின்ற யாவர்க்கும்
கூட்டிவந்து வாயில் கொடு
(7)
 
இட்லிதரும் தாயை இடியமினாய்ப் பார்ப்போர்பின்
இட்லிக்காய் ஏங்குவர் பார்!
(8.)
 
நாடுவிட்டு நாடுபோய் நாம்நிற்கும் போதில்தான்
நாடுமாம் நம்முணவை நாக்கு
(9)
 
முதுமையில் நண்பனாய் முன்வந்து நிற்கும்
இதுபோல் இருந்தால் இயம்பு?
(10)
 
✍️செ. இராசா

No comments: