12/03/2022

தவநெறி

அகத்தில் அமைதி அமர்ந்திட வேண்டும்
ஆத்மா எதுவென ஆய்ந்திட வேண்டும்
இதயம் இறைப்பேர் இசைந்திட வேண்டும்
ஈசன் அளித்ததை ஏற்றிட வேண்டும்
உட்பொருள் கண்டிடும் உள்ளொளி வேண்டும்
ஊன்றித் தெளிகிற ஓர்மையும் வேண்டும்
எதுவரை யாதென எண்ணிட வேண்டும்
ஏனெனக் கேள்வி எழுப்பிட வேண்டும்
ஐயங்கள் இன்றி அறிந்திட வேண்டும்
ஒருவழிப் பாதையில் ஓங்கிட வேண்டும்
ஓரிறை உண்மை உணர்ந்திட வேண்டும்
ஔடதம் வேண்டிடா ஆனந்தம் வேண்டும்
அஃதே இலக்கென்ற ஆழ்மனம் வேண்டும்
 
✍️செ. இராசா

No comments: