18/08/2021

உன்னைப்பற்றி எழுத நினைத்தால்

உன்னைப்பற்றி எழுத நினைத்தால்
ஒரு வார்த்தையும் வரவில்லை...
பிறகுதான் புரிந்தது..
நீ வரிகளுக்குள் அடங்காக் கவியென்று..

உன்னைப்பற்றி பாட நினைத்தால்
ஒரு ராகமும் சிக்கவில்லை
பிறகுதான் புரிந்தது..
நீ மெட்டுக்குள் அடங்காக் கீதமென்று..

உன்னைப்பற்றி வாழ நினைத்தால்
அனைத்துமே கிட்டியது
இப்போது புரிகிறது
நீதான் நான் தேடிய எல்லாமும் என்று

No comments: