29/08/2021

அதே நாளில் அப்படியே

 #ஆச்சரியம்_ஆனால்_உண்மை

முந்தைய வருடங்களில் எழுந்த அதே சிந்தனைகள் அதே நாளில் அப்படியே எழுவதை நான் அடிக்கடி உணர்ந்துள்ளேன். பலமுறை அதை எதேச்சையான ஒரு ஒப்புமை (coincidence) உணர்வார்கவே எண்ணி கடந்து சென்றுள்ளேன். ஆனால் இம்முறை அப்படி கடந்து போகாமல் அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆம்.... இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய கவிதையும் இன்று நான் எழுதிய ஒரு கவிதையும் (நாளைய வள்ளுவர் திங்களுக்காக எழுதியது) ஒரே எதுகையில் (டை) வந்துள்ளது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை ஒப்புமை என்று என்னால் கடந்து போக முடியவில்லை. காரணம் வார்த்தைகளும் ஏறக்குறைய ஒத்துப் போகிறது. வடிவம் மட்டுமே வேறு.

போன வருடம் எழுதிய கவிதை இதோ;

#தமிழே_வா
*************
இடையூறு செய்யாத எழுத்தை
தடையேதும் இல்லாமல் தா- தமிழே
உடைகட்டி உரையாடும் எழுத்தை
தடைபோட்டு தடுத்தாள வா!

நடைமாற்றி நடிக்கின்ற உறவை
விடையின்றி வெளியேற்ற வா- தமிழே
எடைபோட்டு பார்க்கின்ற உறவை
மடைபோட்டு மறித்தாட வா!

கடையேழு வள்ளல்கள் மனத்தைக்
கொடையாகக் கொடுத்தாள வா!-தமிழே
குடைபோல காக்கின்ற குணத்தை
அடைகின்ற ஞானத்தைத் தா!

✍️செ. இராசா

No comments: