11/08/2021

தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா

 


தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
தேவை உனக்கில்லையோ..
பாடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
பார்வை உனக்கில்லையோ..

நேற்று கதைக்கயிலே கண்ணம்மா
நெஞ்சம் குளிர்ந்ததடி..
காற்றுப் புயல்மழையோ கண்ணம்மா
கண்கள் நனைந்ததடி..

என்ன தவறிழைத்தேன் கண்ணம்மா
என்னைத் துறந்தனையோ...
அன்பின் பிழைபொறுத்தே கண்ணம்மா
அள்ளித் தழுவாயோ...

✍️செ. இராசா

No comments: