19/08/2021

உன்னை எழுத நினைச்சேன் வார்த்தை கிடைக்கல

 

உன்னை எழுத நினைச்சேன்
வார்த்தை கிடைக்கல
உன்னைப் பாட நினைச்சேன்
ராகம் கிடைக்கல
அடியே...
உன்னை நினைச்சேன்
...இந்தா...இந்தா....இந்தா..இந்தாக் கவிதை பாடுறேன்...ஏ
...இந்தா...இந்தா....இந்தா இந்தாக் கவிஞனாகுறேன்...
வாழ்க்கையினா என்ன புள்ள
...வெங்காயந்தான் கேளு புள்ள
..உரிக்க உரிக்க கண்ணீர் வரும்
......ஒன்னும் இல்லை..
நாளையெல்லாம் நாளை புள்ள
.....நானும் நீயும் இதோ புள்ள
உள்ள வரை உண்மையிலே
...வாழ்வோம் புள்ள..
 
சகியா சதியா அடி நீ யார்?
புரியா புதிராய் நீ நீ நீ நீ
 
✍️செ. இராசா

No comments: